Monday, December 26, 2011

தொடரும் கள்ள மௌனம் வெளிச்சத்திற்கு வரும் V. R. கிருஷ்ண (அய்யர்) னின் சாதி முகம்.

தொடரும் கள்ள மௌனம்...
வெளிச்சத்திற்கு வரும் V. R. கிருஷ்ண (அய்யர்) னின் சாதி முகம்.

அகில இந்தியா முழுவதும் முற்போக்கு வாதி எனவும், சிந்தனை சிற்பி எனவும் மனித உரிமை ஆர்வலர் எனவும் வெகுஜன ஊடகங்கள் மட்டுமல்லாது தலித் இயக்கங்கள் முதற்கொண்டு மற்ற தோழமை இயக்கங்களாலும் புகழப்படுகின்ற முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு V. R. கிருஷ்ணனின் சாதி முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

ஆம், திருவாளர் V. R. கிருஷ்ணன் தான் நீதிபதி என்பதை விடவும் ,மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் பேர்வழி என்பதை விடவும் “அய்யர்” என அறியப்படுவதைத்தான் விரும்புகின்றார் என்பதுதான் உண்மை.

இதை மேலும் விளக்க திரு.V. R. கிருஷ்ணனுக்கு அனுப்பப்ட்ட இரு கடிதங்களின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
11/1/2011
சென்னை

திரு .
நீதிபதி V. R. கிருஷ்ணன்,(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி),
சத்கமய
மகாத்மா காந்தி சாலை
கொச்சின் - 682001
கேரளா, இந்தியா

ஐயா ,

தங்களுக்கு ஒரு விண்ணப்பம்.

தங்களின் ஒய்வில்லாத உழைப்பை கண்டு ஊக்கம் பெறுபவர்களில் நானும் ஒருவன் . முற்போக்காக சிந்திப்பவர்களில் பலர் தங்களை போற்றுகின்றனர்கள் . பெரிதும் மதிக்கின்றனர் . மேலும் தாங்கள் தற்கால புதிய சிந்தனைகளின் குறியீடாக கருதப்படுகின்றீர்கள். தீண்டாமை ஒழிப்பு, தூக்கு தண்டனை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நாட்டின் மேலமை நீதிமன்றங்களின் கன்னியத்தை காப்பதுவரை தங்கள் குரல் மதிக்கப்படுகின்றது. மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

அய்யா, ஒரு குறிப்பிட்ட விடயம் உங்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அது உங்களின் பெயராக அறியப்படுகின்ற V. R. கிருஷ்ண அய்யர் என்பதாகும். இந்தியாவில் உள்ள சாதிகளின் சமூக நிலைகளை பற்றி யாரும் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நீங்கள் சமூக மாற்பாடு குறித்தும், சட்டத்தை பற்றியும் பல புத்தகங்களை எழுதியுள்ளீர்கள். அய்யர் எனும் வார்த்தை உணர்த்தும் விடயங்கள் பல. தாங்கள் அச்சு மற்றும் காணொளி ஊடகங்களால் நீதிபதி அய்யர் எனவே அடிக்கடி குறிப்பிடப்படுகின்றீர். நீங்கள் இதை அறிவீர்களா? விக்கிப்பீடியா எனும் தகவல் களஞ்சியத்திலே கூட உங்கள் பெயர் “நீதிபதி அய்யர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? சாதியின் பெயரால் அடையாளப் படுத்திகொள்வதும், சாதீயத்தைக் கடைபிடிப்பதும் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் குணமாக இருக்க முடியாது. பாபா சாகேப் B. R. அம்பேத்கர் அவர்கள் சாதியை மக்களை பிளவு படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனம் என்று மிகச்சரியாக விளக்கியுள்ளார். யாரும் சாதியை அவரப்போல துள்ளியமாக எப்போதும் விளக்கியதில்லை.

அய்யர் எனப்படும் வார்த்தை ஒரு சாதாரண இணைப்புச்சொல்லாக இருக்கவே முடியாது. அது ஒரு சாதியை குறிக்கின்றது. தென்னகத்தில் நம் மக்கள் “ தந்தை பெரியாரின் தலைமையில் ஒரு நீண்ட விளக்க கூட்டங்களை நடத்தியுள்ளனர். ஏன் அது செய்யப்பட்டது? ஏனென்றால் “ பிராமணாள் மட்டும்” என்ற வாசகங்களை உணவு விடுதி மற்றும் பிற இடங்களில் இருந்து அகற்றுவதற்காக நடத்தப்பட்ட்து. பார்ப்பனியத்தை கடைபிடிப்பது மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.சாதியை கடைபிடிப்பது என்பது பர்பனியத்தின் கொள்கையே. எனவேதான் தந்தை பெரியார் இதன் தீமையை உணர்ந்த பின் தன் சாதிப் பெயரை துறந்தார். மேலும் தன் ஆதரவாளர்களை அவ்வாறே செய்ய பனித்தார். பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பன பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல.பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களே. நீங்கள் பார்ப்பனர் அல்ல என நம்புகிறேன்.
எனவே சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக்கொள்வதும், பெயருக்குக் பின்னால் அய்யர் என சேர்த்துக் கொள்வதும் உங்களுக்கோ, உங்களை நம்புபவர்களுக்குகோ நீதி வழங்காது. வரலாற்றின் நீண்ட பக்கங்களில் 90 அல்லது 100 வருடங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. உங்களை மதிக்கும் ஒருவனாக எனக்கு தங்கள் பெயர் தங்களுக்கு அநீதி அளிப்பதில் விருப்பம் இல்லை. தாங்கள் மதிப்பிற்கு, தேவைக்கு அதிகமாக கவலைப்படுபவர் இல்லை என்றாலும் உங்கள் மதிப்பு உங்களோடு மட்டும் தொடர்புடையது இல்லை. அது இந்நாட்டில் முற்போக்காக சிந்திப்பவர்களில் பெரும்ப்பான்மையோரின் மதிப்பிலும் தொடர்புடையது. எனவே தாங்களின் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற இணைப்பை தவிர்க்கவும். தாங்கள் சாதியை எதிர்க்கின்றீர் என பொதுமக்களுக்கு தெரிவிக்கவும். ஊடகங்களுக்கு உங்கள் பெயருக்குப் பின்னர் அய்யர் என இடவேண்டாம் என கூறவும்.

இப்படிக்கு
சரவணன்.

இக்கடிதம் 17-1-2011 அன்று V. R. கிருஷ்ண அய்யர் என்ற முத்திரையுடன் பெறப்பட்டது. இதன் பின் எவ்வித பதிலோ, விளக்கமோ, பொது அறிவிப்போ இல்லாததால் கீழ்கண்ட கடிதம் மீண்டும் அனுப்பப்பட்டது.
சென்னை
9-2-2011

திரு நீதிபதி V. R. கிருஷ்ணன்,(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி),
சத்கமய
மகாத்மா காந்தி சாலை
கொச்சின் - 682001
கேரளா, இந்தியா

அய்யா,
பார்வை - எனது 11-1-2011 நாளிட்ட கடிதம்.
நான் தங்கள் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற வார்த்தையை இணைக்க வேண்டாம் என்றும் சாதியை எதிர்க்கின்றீர்கள் என அறிவிக்கக் கோரியும் வேண்டுகோள் விடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக, தாங்கள் தற்போதுவரை அதை செய்யவில்லை. தங்களின் மௌனம், தாங்கள் உண்மையாகவே விருப்பத்துடன் தான் " அய்யர் " என அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள் என ஒரு பார்வையை உருவாக்கிவிடும் . எனவே ஒருவர் மிக எளிதாக தங்களின் உள்ளுணர்வு தாங்கள் சாதீயத்தை கடைபிடிப்பதை அனுமதிக்கின்றது எனவும் தாங்கள் சுயமாகவே விருப்பத்துடன் இந்த மனித தன்மையற்ற செயலை கடைபிடிப்பதாக எண்ணுவார்.
தங்களை மதித்து போற்றிய அனைவருமே தாம் தவறு செய்துவிட்டதாக கருத இடம் அளிக்ககூடாது.
தாங்கள் உண்மையாகவே பொறுப்புள்ள மனிதாகவோ அல்லது முற்போக்குவாதியாகவோ தங்களை கருதினால் தாங்களின் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற இணைப்பை தவிர்க்கவும். தாங்கள் சாதியை எதிர்க்கின்றீர் என பொதுமக்களுக்கு தெரிவிக்கவும். ஊடகங்களுக்கு உங்கள் பெயருக்குப் பின்னர் அய்யர் என இடவேண்டாம் என கூறவும்.

தாங்கள் இந்த செயலை செய்ய தவறினால் விரைவில் மக்கள் உங்களை ஒரு அடிப்படைவாதியாகவோ அல்லது இரட்டைவேடதாரியாகவோதான் அடையாளம் காணுவார்கள் . தயவு செய்து அதை அ னுமதிக்க வேண்டாம்.
இதற்கும் இதுவரையில் பதிலோ விளக்கமோ பொது அறிவிப்போ இல்லை.
மேற்கண்ட கடிதமும் கிருஸ்ணய்யர் என்ற முத்திரையுடன் தான் பெறப்பட்டது.
மேலும் திருவாளர் கிருஸ்ணணின் மின்னஞல் முகவரிக்கும் மேற்கண்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன . பதில் இல்லை.
திரு. கிருஸ்னணின் இத்தகைய மவுனத்தை நம்மால் எளிதில் புரிந்து கொள்ளமுடிகின்றது. அவரால் சாதியை துறக்க முடியாது. இந்நாட்டில் சாதி என்பது ஒருவனுக்கு எத்தகைய அந்தஸ்த்தை வழங்குகின்றது என்பதை அதை அனுபவிப்பவர்கள் உணர்வார்கள் . எனவே ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் அதை எளிதாக துறக்க முற்பட்டுவது இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள் துறக்க விரும்பினாலும் அதை துறக்க முடியாது. சாதி விருப்பம் அல்ல . அது பிறவியால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பர்ப்பன பட்டம் என்பது வெறுமனே ஒரு இணைப்பு சொல் அல்ல . அது பார்ப்பனர்களுக்கு வழங்கிய உரிமைகள் ,சலுகைகள், வசதிகள் ,வாய்ப்புகள் வறலாறு முழுதும் ஏராளம் உள்ளன. தகுதியும் திறமையும் இல்லமல் போனலும் அந்த வெற்றுப்பட்டமே பார்ப்பனர்களை இந்நாள் வரையிலும் தாங்கிப்பிடித்திருக்கின்றது.வேள்வியில் முக்கிய பாகங்களை பெற்றது முதல் அரச குடும்பத்து மகளிரை பெண்டாள்வது வரை பார்ப்பனர்கள் அனுபவித்த சலுகைகள் ஏராளம். பெரியார் குறிப்பிட்டதைப்போல் " கள்ளிக்கடை, தாசி வீடு முதல் கடவுள் சந்நிதானம் வரை தங்களுக்கு என்று ஒரு இடமும் மற்றவர்களுக்கு ஒரு இடமும் ஏற்படுத்திக்கொண்டனர்.உழைக்கும் மக்கள் அனைவரும் வரி கட்டி மாய்ந்த பொழுதும் எவ்வித உடல் உழைப்பும் இல்லாமல் வருவாயும் உடல் சுகமும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள் . ராஜ ராஜன் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளே இதற்கு சான்று.இவ்வாறு இந்த பார்ப்பன பட்டம் அளித்த சலுகைகள் ஏராளம் ஏராளம்! இவ்வித சலுகைகள் அரசன் காலத்தோடு முற்றுப்பெறவில்லை. அதற்குப்பின் வந்த வெவ்வேறு
அரசர் வம்சத்திலும், முகலாய , நாயக்க மன்னர்கள்முதற்கொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் மற்றும் சுதந்திர இந்தியா வரை இந்த சலுககள் வெவ்வேறு வடிவத்தில் தொடர்கின்றது. இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டதிலும் பார்ப்பனியம் தனக்கு பாதுகாப்பை தேடிக்கொண்டது. கர்ப கிரகதில் காம லீலை அனுபவித்தாலும் பூசை செய்யும் உரிமை பார்ப்பானுக்கே உண்டு. கொலை குற்றவாளியானாலும் சங்கராச்சாரியாக தொடர பார்ப்பனுக்கே உரிமை உண்டு.
வெறும் மனித உரிமை போராளியாக வாழ்வதை விட ,முக்கியத்துவம் வாய்ந்த பிற்ப்பால் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள பேருதவி புரியும் பார்ப்பன பட்டமே பெரிதும் தேவை என கற்ற்றிந்த நீதிபதி திருவாளர் கிருஸ்ணன் நன்கு உணர்ந்துள்ளார்கள். உணராதவர்கள் நாம்தான்.

சாதியை தாங்கிப் பிடித்துக்கொண்டே ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ,மனித உரிமை பற்றி பேசுபவர்கள் , ஜனநாயகத்தைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுபவர்கள் என இந்த போலி மனிதர்கள் நிறைய உள்ளனர். V.R. கிருஸ்ணன் ஒரு சான்று அவ்வளவே. இவர்களிடைய குரல் நிச்சயம் ஒடுக்கப்பட்டவர்களுகனது அல்ல. இவர்கள் பேசும் அத்தனை உரிமைகளும் இவர்கள் சார்ந்துள்ள இனத்தின் நலம் சார்ந்தது. இவர்களால் எவ்வித மாற்றமும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்படப்போவது இல்லை.
உண்மையில் சாதிய சுரண்டலை விட ஒரு பொருளாதார குற்றம் இல்லை. சாதியின் பெயரைச் சொல்லி சக மனிதனின் உழைப்பை திருடுவதை விட பெரிய ஊழல் இல்லை. சாதியை விட ஒரு பெரிய்ய ஜனநாயக விரோதம் இல்லை. ஆனால் சாதியைப்பற்றி பேசமல் இந்நாட்டில் ஒருவர் ஊழல், ஜனநாயகம், மனித உரிமை என வெற்று முழக்கங்களை இட முடியும் . மாமனிதர் பட்டமும் வாங்கமுடியும். வெற்கம்.

எந்த சாதி முறை தங்களை தாழ்ந்தவனாக அறிவித்து அடிப்படை உரிமைகளைக் கூட பறித்து மீழாத்துயரில் தள்ளியதோ அதே சாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் இட்டுக்கொள்ளும் செயலும் அறிவீனமே.தமிழ்நாட்டில் ’பறையர்’ ’, தேவேந்திர ர் ‘, நாடார், தேவர் என்ற இன்ன பிற பட்டங்களை காவித்திரிவதும் மக்களுக்காக பாடுபட்ட சில தலைவர்களுக்கும் சாதி பெயரை சூடி மகிழ்வதும் முட்டால்தனமேயன்றி வேறல்ல. பச்சைத்தமிழன் என பெரியாரால் பாராட்டப்பெற்ற காமராஜரின் பெயருக்குப் பின்னால் ‘நாடார் ’ வாலைத்தொங்கவிடுவது ,அப்படிச்செய்பவர்களின் வயிற்றுப்பிழைப்பிற்கு வேண்டுமானால் உபயோகப்படுமேயன்றி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்காது. அதேபோல் தோழர் இம்மானுவேலிற்குப் பின் ‘தேவேந்திர்ர் பட்டத்தைச் சேர்ப்பதும் சமூக நீதிக்காக போராடி உயிர் நீத்த அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. சாதியே பார்ப்பனியத்தின் கொள்கை. சிலர் பார்ப்பனியத்தை எதிப்பதாற்கான ஒரு குறியீடாக தன் சாதிப்பெயரை காட்டிக்கொண்டாலும் சாதிப்பெயரை இட்டுக்கொள்வதன் மூலம் பார்ப்பனியத்திற்கான ஆதரவையே வழங்குகிறார்கள்.. இச்சமுதாயத்திலிருந்து சாதியை செயலால், சிந்தனையால் முற்றிலுமாக ஒழிப்பதால் மட்டுமே மனித வாழ்வை மேம்படுத்த முடியும் .
எனவே சாதியை எதிர்ப்பதே மனித உரிமை, ஜனநாயகத்தை ,ஊழலை பேசுபவர்களின் முதல் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர வேறு அல்ல.

No comments: